திருவேற்காடு – கருமாரியம்மன்


நேற்று உறவினர் ஒருவரை சந்திக்க, அம்பத்தூர் வரை செல்ல வேண்டியிருந்தது. வீட்டில் இருந்த கிளம்பி அம்பத்தூர் எஸ்டேட் தாண்டும் வரை வேறு எங்கும் செல்லும் என்னமோ திட்டமோ இல்லை. எஸ்டேட் தாண்டி ஓ டி செல்லும் வழியில் திருவேற்காடு செல்லும் சாலை வரும். அங்கு ஒரு தகவல் பலகை வைத்திருந்தார்கள். எதேச்சையாக அதைப் பார்த்தவுடன் மனம் விரைவாக திட்டமிட ஆரம்பித்தது. உறவினர் வீட்டிற்கு சென்றவுடன், முதல் வேலையாக மொபைலில் நோண்டி வழியும் தொலைவும் பார்த்துக் கொண்டேன்.

நன்றி : இணையம்

பின், கதிரவன் கீழிறங்கத் துவங்கிய வேளையில் அங்கிருந்து கிளம்பி , ஒரு அரை மணி நேரத்தில் திருவேற்காடு சேர்ந்தோம். குளக்கரையில் வண்டியை பார்க் செய்து விட்டு , வந்தால் முதல் சோதனை. குளத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு, கோவில் பிரதான வாயில் எதிரே சேற்றுத் தண்ணீர். எதோ பைப் உடைந்துள்ளது. அதை சரி பண்ண யாருக்கும் நேரமில்லை போல. காலைக் கீழே வைக்க முடியாத அளவிற்கு சகதி.  பின் அங்கிருந்தவர்கள் , பக்கவாட்டில் இருந்து மற்றொரு வழியைக் காட்ட, அதன் வழியாக உள்ளே நுழைந்தோம்.

நன்றி ; இணையம்

நன்றி ; இணையம்

கோவில் உள்பிரகாரத்தினுள் நுழைந்தவுடன் முதலில் காட்சி அளித்தவர், ஷண்முகன். உத்திரத்தன்று உள்ளே நுழைந்தவுடன் முருகன் தரிசனம். வேறென்ன வேண்டும்…முருகனை மனமாரக் கும்பிட்டு மேற்கொண்டு நடந்தால், மரச்சிலை அம்மன் சன்னிதி. இது அம்மனின் உற்சவரா , இதன் பின் உள்ள கதை என்ன எனத் தெரியவில்லை. ஆனால் அம்பாளின் கண்கள்  இதை வர்ணிக்க அந்த காளிதாசன்தான் வரவேண்டும். என்ன ஒரு வாத்சல்யம் அந்தக் கண்களில்.. கருணைப் பொங்கும் கண்கள் என்பார்களே அதற்கு அந்தக் கண்கள்தான் உதாரணம். இந்த நொடி வரை அவ்விருக் கண்களும் என் நினைவில் இருந்து அகலவில்லை. எத்தனை நேரம் நின்றாலும், பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற அந்த முகம். பின் மெதுவாய், வரிசையில் நின்று அம்பாளைத் தரிசனம் செய்தோம். மிக அற்புதமான தரிசனம். எந்த வித விரட்டல்களும் இல்லாமல் , நின்று நிதானமாய் தரிசித்தோம்.

கிளம்பும் தருவாயில் பார்த்தது, கோவிலின் ஒரு மூலையில் புதிதாய் கட்டியது போல் இருந்த பெருமாள் சன்னிதி . சகலாபரண பூஷிதராக  நின்றுக் கொண்டிருந்த பெருமாளையும் , அங்கிருந்த சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சமேத ராமரையும் தரிசித்து, பின் இருட்டும் தருவாயில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

திருவேற்காடு போகும் எந்த விட திட்டம் இல்லாமல் இருந்தவர்களை அழைத்து , அற்புதமான தரிசனம் செய்வித்தது அந்த அம்பாளேதான்…

அடுத்த வாரம் திருநீர் மலை அல்லது சிறுவாபுரி முருகன் கோவில் செல்ல எண்ணம் வைத்துள்ளேன். இறைவன் அருள் எப்படி உள்ளதோ….

அன்புடன் எல்கே

2 Comments »

  1. நல்ல பயணம். நாங்க இருக்கும்போது அம்பத்தூருக்கே வந்ததில்லை; இப்போ போறீங்க போல! :)))))

  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்… நன்றி…

    அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

    வலைச்சர தள இணைப்பு : வெள்ளியின் விடியல்கள்


RSS Feed for this entry

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.